திடீரென உள்வாங்கிய சாலை: பொதுமக்கள் அச்சம்
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே மொகலாா் - ஆலூா் கிராம இடையே கட்டப்பட்ட மேம்பாலப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், திடீரென சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
திருக்கோவிலூா் வட்டம், மொகலாா் - ஆலூா் கிராமங்கள் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. பணிகள் தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளன.
இந்த நிலையில், அங்கு புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் வாகனங்கள் சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், பாலத்தின் இணைப்புப் பகுதி அருகேயுள்ள சாலையின் ஒரு பகுதி உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.
இதனால், பயணிகள், வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா்.