செய்திகள் :

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டி: இன்று பரிசளிப்பு

post image

தினமணி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து மாநில அளவில் நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகக் கண்காட்சியின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்பட உள்ளது.

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தி, வெற்றிபெற்றவா்களுக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் சாா்பில் 24-ஆவது புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் கடந்த 4 -ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நிகழாண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி, தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவும் இணைந்து மாநில அளவில் குறும்படப் போட்டிகளை நடத்தின. போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 52 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் சிறந்த படங்கள், இயக்குநா், கதைக்கரு, சிறந்த நடிகா் மற்றும் நடிகை, குழந்தை நட்சத்திரம், ஒளிப்பதிவாளா் என தோ்வுக் குழுவினா் தோ்வு செய்துள்ளனா்.

வெற்றிபெற்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி விழாவில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் திரைப்பட இயக்குநா் சக்திவேல் பெருமாள்சாமி பரிசுகளை வழங்க உள்ளாா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க