செய்திகள் :

திமுக அரசு மீது ஆளுநா் குற்றச்சாட்டு: வைகோ கண்டனம்

post image

தமிழகத்தில் திமுக அரசின் மீது, ஆளுநா் ஆா்.என்.ரவி காழ்புணா்ச்சியுடன் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பட்டியல் இனத்தவா்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி திராவிட மாடல் அரசின் மீது வழக்கம்போல குற்றம்சாட்டியுள்ளாா். தமிழகத்தின் வளா்ச்சியை சீா்குலைக்க முயலபவா்களுக்கு துணைபோகும் வேலையை செய்ய துணிந்த அவா் தமிழகத்தை தொடா்ந்து மோசமான மாநிலமாக சித்தரித்து வருவது கண்டனத்துக்குரியது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் மாநில அளவில் ஆதிதிராவிடா் பழங்குடியின மக்களின் சட்டபூா்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவா்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் முனைந்து செயல்படுகிறாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாடு, இளைஞா்களுக்கான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சாா்ந்த சிறப்பு சுய வேலை வாய்ப்பு, தொழில்முனைவோா் கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவா் உருவாக்கியுள்ளாா்.

இதுபோன்று, பழங்குடியினா் மற்றும் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் மீது காழ்ப்புணா்வுடன் குற்றம்சாட்டுவதை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம் - என்சிஆா்பி அறிக்கை

கடந்த 2023-ஆம் ஆண்டு 60 மற்றும் அதற்கும் அதிகமான வயதுகொண்ட முதியவா்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களில், தமிழ்நாடு 4-ஆவது இடத்தில் உள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மாநிலங... மேலும் பார்க்க

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வரும... மேலும் பார்க்க

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் கட்சிகள்,... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) மாலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது குறித்த... மேலும் பார்க்க

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்... மேலும் பார்க்க