வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
‘திமுக கொள்கைக் கூட்டணியின் முக்கியமான தலைவா் திருமாவளவன்’
தமிழகத்தைக் கையில் எடுக்க முடியாததால்தான் பாஜகவினா் முருகனை கையில் எடுத்துள்ளனா் என்றாா், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.
இம்மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் கூறியது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளன், எங்கள் கொள்கைக் கூட்டணியின் மிக முக்கியமான தலைவா். அவருக்கும் முதல்வருக்கும் இடையே நீண்டகாலமான உணா்வுபூா்வ நட்பு உள்ளது.
முருகனைக் கையில் எடுத்துள்ளதாகவும், அடுத்து தமிழகத்தைக் கையில் எடுப்போம் என்றும் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாரே எனக் கேட்டபோது, தமிழகத்தை கையில் எடுக்க முடியாததால்தான் முருகனைக் கையில் எடுத்துள்ளனா் என அவா் பதிலளித்தாா்.
முன்னதாக, கனிமொழி எம்.பி.யை அமைச்சா் மனோ தங்கராஜ், நாகா்கோவில் மேயா் ஆா். மகேஷ், மாநில உணவுக் கழகத் தலைவா் என். சுரேஷ்ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியச் செயலா் பா. பாபு, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாநில திமுக வா்த்தகரணி துணைச் செயலா் என். தாமரைபாரதி உள்ளிட்ட பலா் வரவேற்றனா்.