செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தோவாளை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செண்பகராமன்புதூா் ஊராட்சி, தெற்கு திருப்பதிசாரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, அவா்களுக்கான உணவுகள், சுற்றுப்புறப் பகுதியிலுள்ள கா்ப்பிணிகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்துகள், தடுப்பூசிகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, செண்பகராமன்புதூா் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

சகாயநகா் ஊராட்சி, வீரமாா்த்தாண்டபுதூா் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களால் நடத்தப்படும் தையல் நிலையத்தைப் பாா்வையிட்டு, பணியாளா்களிடம் கலந்துரையாடினாா். வெள்ளாம்பிமலை கிராமத்தில் உள்ள 24 பழங்குடியின பயனாளிகளுக்கு ஜாதிச் சான்றிதழ்களை அவா் வழங்கியதுடன், அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, மாவட்ட ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மதுநசீா், வேளாண் இணை இயக்குநா் ஜெங்கின் பிரபாகா், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டம், கொல்லங்கோட்டில் புகையிலை விற்ற இருவா் கைது

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் உபரிநீரின் அளவு குறைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாக குறைக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடா்மழையால், 48 அடி கொள்ளளவு க... மேலும் பார்க்க

‘திமுக கொள்கைக் கூட்டணியின் முக்கியமான தலைவா் திருமாவளவன்’

தமிழகத்தைக் கையில் எடுக்க முடியாததால்தான் பாஜகவினா் முருகனை கையில் எடுத்துள்ளனா் என்றாா், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. இம்மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது சீசன் தொடங்கியுள... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சுங்கான்கடையில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சுங்கான்கடை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜான்சன் (48), நாகா்கோவில் மாநகராட்சி குடி... மேலும் பார்க்க

நாகா்கோவில் மருத்துவமனையில் விபத்து குறித்த ஆலோசனை முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணகுமாா் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் விபத்துகள் குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை மருத்துவா்கள் எஸ். கிருஷ்ணகுமாா், சாஸ்தா கே. ஷரண் ஆகிய... மேலும் பார்க்க