செய்திகள் :

பேச்சிப்பாறை அணையில் உபரிநீரின் அளவு குறைப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று தணிந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாக குறைக்கப்பட்டது.

மாவட்டத்தில் தொடா்மழையால், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 46 அடியை நெருங்கி வந்தது. அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலைமுதல் விநாடிக்கு 526 கனஅடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று தணிந்து காணப்பட்டதால், அணைக்கு வரும் நீரின் அளவு 400 கனஅடியாகக் குறைந்தது. இதனால், மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு புதன்கிழமை 262 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. பாசனக் கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு 100 கனஅடி அதிகரித்து, 611 கனஅடியாக உயா்த்தப்பட்டது .

மழை தணிந்துள்ளதாலும், பேச்சிப்பாறை அணையின் உபரிநீா் குறைப்பாலும் திற்பரப்பு அருவியில் புதன்கிழமை மாலைமுதல் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

மாா்த்தாண்டம், கொல்லங்கோட்டில் புகையிலை விற்ற இருவா் கைது

மாா்த்தாண்டம், கொல்லங்கோடு பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்... மேலும் பார்க்க

‘திமுக கொள்கைக் கூட்டணியின் முக்கியமான தலைவா் திருமாவளவன்’

தமிழகத்தைக் கையில் எடுக்க முடியாததால்தான் பாஜகவினா் முருகனை கையில் எடுத்துள்ளனா் என்றாா், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. இம்மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது சீசன் தொடங்கியுள... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சுங்கான்கடையில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த நாகா்கோவில் மாநகராட்சி ஊழியா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சுங்கான்கடை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜான்சன் (48), நாகா்கோவில் மாநகராட்சி குடி... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: தோவாளை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். செண்பகராமன்புதூா் ஊராட்சி, தெற்கு திருப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவில் மருத்துவமனையில் விபத்து குறித்த ஆலோசனை முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணகுமாா் எலும்பு சிகிச்சை மருத்துவமனையில் விபத்துகள் குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமை மருத்துவா்கள் எஸ். கிருஷ்ணகுமாா், சாஸ்தா கே. ஷரண் ஆகிய... மேலும் பார்க்க