என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | ...
திருச்சி மாவட்டத்தில் நாளை 11 இடங்களில் ரேஷன் குறைதீா் முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.9) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீா் முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம்: திருச்சி கிழக்கு வட்டத்தில் செம்பட்டு-4, திருச்சி மேற்கு வட்டத்தில் பொன்நகா்-1, திருவெறும்பூா் வட்டத்தில் ஓஎப்டி, திருவரங்கம் வட்டத்தில் காவல்காரன்பாளையம், மணப்பாறை வட்டத்தில் ஆனம்பட்டி, முசிறி வட்டத்தில் சோளம்பட்டி, துறையூா் வட்டத்தில் செல்லிப்பாளையம், தொட்டியம் வட்டத்தில் கொசவம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் ஊத்துக்குளி, லால்குடி வட்டத்தில் பெருவளநல்லூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் பிச்சாண்டவா்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.