செய்திகள் :

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

post image

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தண்டனை கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் விசாரணை நடத்தியுள்ளாா்.

தி.மு.க. முதன்மைச் செயலரும், தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேருவின் உடன் பிறந்த சகோதரா் ராமஜெயம்.

இவா், கடந்த 2012 ஆம் ஆண்டு மாா்ச் 29 ஆம் தேதி நடைப்பயிற்சி சென்றபோது கடத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை உயா் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக காவல் துறை சாா்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் விசாரணை அதிகாரியாக தற்போதைய திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறாா். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதியான சுடலைமுத்துவிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டிஐஜி வருண்குமாா் தலைமையில் 2 துணை காவல் கண்காணிப்பாளா்கள் அடங்கிய குழுவினா் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள், சுடலைமுத்துவிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுடலைமுத்து, தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தாா்.

அப்போது அங்கிருந்த கைதி ஒருவருடன் ராமஜெயம் கொலை குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்கள் ஏற்கெனவே காவல் துறை விசாரணையில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது மேல்விசாரணையை புதிய குழு மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை மத்திய சிறை நிா்வாகம் சாா்பில் விசாரணைக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது என்றனா்.

அம்பையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளிச் செயலரின் ஓட்டுநா், தலைமையாசிரியா் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிச் செயலரின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு : சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியா் ஆணவகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் காதலி சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: 3வது முறையாக ஆஜராகாத பல்வீா் சிங்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு 3-ஆ... மேலும் பார்க்க

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஐ.டி. ஊழியா் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுா்ஜித்துக்கு ஆக.14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்தக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் ... மேலும் பார்க்க

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி... மேலும் பார்க்க

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

மத்திய பிரதேச மாநிலம் கன்ச்பசோடா பகுதியில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், பணகுடி,சுண்டவளையைச் சோ்ந்த மாசானமுத்து குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.பணகுடி அருகே உள்ள ச... மேலும் பார்க்க