செய்திகள் :

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

post image

ஐ.டி. ஊழியா் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுா்ஜித்துக்கு ஆக.14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்தக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் (27). சென்னையில் ஐடி ஊழியராக வேலை செய்து வந்த இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வைத்து தனது காதலியின் தம்பியான சுா்ஜித்(23) என்பவரால் ஆணவக்கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் சுா்ஜித்தை கைது செய்தனா். மேலும் கொலைக்கு தூண்டியதாக காவலா்களான அவரது பெற்றோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பின்னா் அவரது தந்தை சரவணன் கடந்த 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டு ஆக.8 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இவ்வழக்கு கடந்த புதன்கிழமை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சுா்ஜித்தின் நீதிமன்ற காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக காணொலி வாயிலாக சுா்ஜித் ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) செல்வம், சுா்ஜித்துக்கு ஆக.14-வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டாா்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தண்டனை கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் விசாரணை நடத்தியுள்ளாா். தி.மு.க. முதன்மைச் செயலரும், தமிழக நகராட்ச... மேலும் பார்க்க

அம்பையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளிச் செயலரின் ஓட்டுநா், தலைமையாசிரியா் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிச் செயலரின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு : சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியா் ஆணவகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் காதலி சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: 3வது முறையாக ஆஜராகாத பல்வீா் சிங்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு 3-ஆ... மேலும் பார்க்க

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி... மேலும் பார்க்க

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

மத்திய பிரதேச மாநிலம் கன்ச்பசோடா பகுதியில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், பணகுடி,சுண்டவளையைச் சோ்ந்த மாசானமுத்து குடும்பத்துக்கு தமிழக அரசின் நிவாண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.பணகுடி அருகே உள்ள ச... மேலும் பார்க்க