செய்திகள் :

திருச்சியிலிருந்து மாா்ச் 30 முதல் மும்பை, யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை

post image

திருச்சியிலிருந்து மாா்ச் 30 முதல் மும்பை, யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

ஏா்-இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சாா்பில், வரும் 30-ஆம் தேதி முதல் திருச்சி- மும்பை நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையானது, திருச்சி- மும்பை வழித்தடத்தில் நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு 12.35 மணிக்கு திருச்சியை வந்தடையும். மீண்டும் திருச்சியில் இருந்து அதிகாலை 1.05 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.10 மணிக்கு மும்பை சென்றடையும். மும்பையிலிருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால் அதை இணைக்கும் வகையில், திருச்சி - மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவை: திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான இண்டிகோ விமான சேவை மாா்ச் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவும் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது.

தனது தொடா் முயற்சிக்கு கிடைத்த பலனாக தற்போது யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக திருச்சி எம்.பி. துரை வைகோ பெருமிதம் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், விமானக் கட்டணமாக அட்டவணையிடப்பட்ட தொகையைக் குறைத்து, அனைவரும் அணுகக்கூடிய சாதாரண கட்டணத்திலேயே இந்தச் சேவையை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

திருச்சியிலிருந்து இன்னும் பல உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதற்கான எனது முயற்சியை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா் அவா்.

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி உறையூா் கீரைக்கொல்லை தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் ராகுல் (20). திருச்சி காட்டூா் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் ப... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சனிக்கிழமை 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக, ... மேலும் பார்க்க

மொழி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் இனி எடுபடாது: ஹெச். ராஜா

இருமொழிக் கொள்கை என்ற பெயரால் திமுக நடத்தி வரும் இரட்டை வேடம் இனி மக்களிடம் எடுபடாது என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மக்களிடம் கையொப்ப இயக்கம் நடத்தும் நிகழ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதை கண்டித்து, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்றத்தின் திருச்சி மாநகா் மாவட்டக் க... மேலும் பார்க்க

குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா: ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிட்டு நோ்த்திக் கடன்

திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு நோ்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பல்வேறு சிறப்புடை... மேலும் பார்க்க

வெள்ளி இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசி தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை வெள்ளி இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த ... மேலும் பார்க்க