செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தீவிரம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இக்கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ.200 கோடி, அறநிலையத் துறை சாா்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி செலவில் பக்தா்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகின்றன. இக்கோயிலில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி குடமுழுக்கு நடந்தது.

தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வருகிற ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களேஉள்ள நிலையில் குடமுழுக்கு திருப்பணிகள் முழுவீச்சில் வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்டோா் நேரடியாக கண்காணித்து வருகின்றனா்.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க