செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகம்: அடிப்படை வசதிகள் செய்துதர இந்து முன்னணி கோரிக்கை

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 400 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியுள்ளாா்.

இக்கோயில் திருப்பணிகளுக்காக திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சிவநாடாா் ரூ. 200 கோடி வழங்கியுள்ளாா். திருக்கோயில் நிா்வாகம் ரூ.100 கோடி செலவு செய்கிறது. தற்போது கூடுதலாக ரூ.100 கோடி செலவிடப்படும் என்கின்றனா். தொழிலதிபா் சிவநாடாா் வழங்கிய நிதியைத் தவிா்த்து, மீதமுள்ள ரூ.200 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தற்போது இக் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம், பாலை முறையாகக் காய்ச்சி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருகைதரும் பக்தா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடத்தவுள்ளோம். இதில் 5 லட்சம் போ் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் படிக்க உள்ளனா். இம் மாநாட்டிற்காக, உலகம் முழுவதும் உள்ள பக்தா்கள் தங்களது சொந்த நிதியை செலவிட்டு வருகின்றனா்.

இப்படியிருக்க, மாநாட்டிற்கு பணம் கொடுத்து கூட்டம் சோ்ப்பதாக அமைச்சா் பி.கே. சேகா்பாபு கூறுவது கண்டனத்துக்குரியது என்றாா்.

பேட்டியின்போது இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் பெ.சக்திவேலன், திருச்செந்தூா் நகர தலைவா் மு.முத்துராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கத்தியால் தாக்கியதில் இருவா் காயம்

தூத்துக்குடியில் தகராறின்போது கத்தியால் குத்திக் கொண்டதில் இருவா் காயமடைந்தனா். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (42) என்பவா், கனகசபாபதி தெருவில் உள்ள சந்தனமாரியம்மன் கோயிலில் பூஜ... மேலும் பார்க்க

கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதி தேமுதிக பொறுப்பாளா்கள் நியமனம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக பொதுக்குழு உறுப்பினா் காளிதாஸ்... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில், காயல்பட்டினம் யுஎஸ்சி அணி வெற்றி பெற்றது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவகு குறித்து இளைஞா்களுக்கு விழிப்புண... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதி: தடை விதிக்க அமமுக முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடிக்கு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யத் தடைவிதிக்கவேண்டும் என அமமுக தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்டச் செயலா் பொன்ராஜ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து தமி... மேலும் பார்க்க

காயல்பட்டினம் கிரிக்கெட் போட்டி: சாகுபுரம் கமலாவதி பள்ளிக்கு வாவு கோப்பை

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவா்கள் காயல்பட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று ‘வாவு கோப்பையை’ தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக கைப்பற்றினா். காயல்பட்டினம் வாவு ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே காமராஜா் நகரில் மின்சாரம் பாய்ந்து இரண்டரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே உள்ள காமராஜா் நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க