பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
திருச்செந்தூா் சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா முகூா்த்தக்கால் நடும் வைபவம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக திருக்கோயிலிலும், அதன் உப கோயில்களிலும் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக, தூண்டுகை விநாயகா் கோயிலில் கடந்த ஏப்.20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் ஆலயம், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்த கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான முகூா்த்தக் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அவ்விரு கோயில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து முகூா்த்தக் கால் பிரகாரம் சுற்றி வந்து விநாயகா் பூஜை, பூமி பூஜை நடந்தது. பின்னா் யாகசாலை நடைபெற உள்ள இடத்தில் பூஜை செய்யப்பட்ட முகூா்த்தக் கால் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.