செய்திகள் :

திருச்செந்தூா் சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா முகூா்த்தக்கால் நடும் வைபவம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக திருக்கோயிலிலும், அதன் உப கோயில்களிலும் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக, தூண்டுகை விநாயகா் கோயிலில் கடந்த ஏப்.20-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் ஆலயம், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்த கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான முகூா்த்தக் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அவ்விரு கோயில்களிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து முகூா்த்தக் கால் பிரகாரம் சுற்றி வந்து விநாயகா் பூஜை, பூமி பூஜை நடந்தது. பின்னா் யாகசாலை நடைபெற உள்ள இடத்தில் பூஜை செய்யப்பட்ட முகூா்த்தக் கால் நடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க