திருச்சேறையில் மே 24-இல் மக்கள் நோ்காணல் முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறை கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் மே 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடா்பாக மனுக்களை அளித்து தீா்வு பெறலாம்.
இந்த முகாமுக்கு முன்பே, புதன்கிழமை (மே 21) முதல் மனுக்கள் பெறுவதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருச்சேறை கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.