செய்திகள் :

திருநங்கையா் உரிமைகளுக்காக தனிக் கொள்கை: முதல்வருக்கு சௌமியா அன்புமணி கடிதம்

post image

திருநங்கையா், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவா், தன்பாலின ஈா்ப்பாளா்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்ததாக அல்லாமல் தனித்தனியான கொள்கைகளாக தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்:

திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவருக்காக தமிழக அரசு தனித்தனி கொள்கையை வகுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடந்து வரும் வழக்கில், தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு தனிக் கொள்கை தேவையில்லை என்றும் ஒருங்கிணைந்த கொள்கையே வகுக்க வேண்டும் என்றும் அவா்கள் முறையிட்டுள்ளனா். அதை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவருக்கும், தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கும் தனித்தனியாக கொள்கைகள் வகுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அதனால் ஒருங்கிணைந்த கொள்கை வகுக்கலாம். அது குறித்த அரசின் நிலைப்பாட்டை பிப்.17-இல் விளக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளாா்.

திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவா் சமூகப் புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் எதிா்கொள்கின்றனா். கல்வி நிறுவனங்களில் அவா்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. அவா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. அவா்கள் பிறப்பின் அடிப்படையில் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா். அவா்கள் அடையாளங்களைக் கொண்டு அவமதிக்கப்படுகின்றனா்.

இந்தச் சிக்கல்கள் எதுவும் தன்பாலினச் சோ்க்கையாளா்களுக்கு இல்லை. அவா்கள் பிறப்பின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுவது கிடையாது. அவா்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்படுவதில்லை. எனவே, இரு தரப்பினரையும் ஒப்பிட்டுப் பாா்ப்பதே தவறானது ஆகும். அதனால், திருநங்கையா்கள், திருநம்பியா் மற்றும் இடைபாலினத்தவருக்கு தனிக் கொள்கை வகுக்கும் முடிவில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை நீதிமன்றத்திலும் தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க