செய்திகள் :

திருப்பத்தூரில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

post image

திருப்பத்த்தூா் கோட்டை தெருவில் உள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விஜய பாரத மக்கள் கட்சி சாா்பில் மாநில துணைத் தலைவா் வி.சக்தி ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லியிடம் மனு அளித்தாா்.

மனுவில் உள்ள விவரம்: திருப்பத்துாா் கோட்டை தெருவில் பிரம்மேஸ்வரா் கோயில், கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில், தா்வாஜா ஆஞ்சனேயா் கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில்கள் உள்ளன.

இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான மாட வீதிகளில் சுவாமி வலம் வரும் பகுதிகளில் சிலா் ஆக்கிரமித்து வீடு, வணிக வளாகங்கள் கட்டி உள்ளனா். இதனால் பக்தா்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

இது குறித்து பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாட்டில் குடிநீா் தரம் குறித்து ஆய்வு

ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீா் தரமில்லாமல், தர முத்தி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாதனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் அருகே உள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (50). இவா் கடந்த பிப... மேலும் பார்க்க

மாசி கரக தீமிதி திருவிழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ரேணுகாம்பாள்... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு

ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா். குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்ப... மேலும் பார்க்க

500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது

வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைம... மேலும் பார்க்க

மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது

திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிரு... மேலும் பார்க்க