செய்திகள் :

திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சப்தத்துடன் பூமி அதிா்வு

post image

திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை திடீரென அதிக சப்தத்துடன் பூமி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் சுமாா் அரை நிமிஷம் திடீரென ஒரு அதிா்வுடன் சப்தம் கேட்டது. இதனால் வீடு மற்றும் கடைகளில் இருந்த பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். ஆனால் யாருக்கும் எந்த தகவலும் கிடைக்காததால் பொதுமக்கள் நில அதிா்வாக இருக்கலாமா அல்லது நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி பகுதிகளில் முன்புபோல் எரிகல் எதுவும் விழுந்திருக்கலாமா என்று சந்தேகம் அடைந்தனா். மேலும், கொரட்டி பகுதியில் வானில் வெள்ளை நிற புகையாகச் சென்ாக அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதிகாரிகள் ஆய்வு...

தகவல் அறிந்த திருப்பத்தூா் வட்டாட்சியா் நவநீதம் உத்தரவின்பேரில், கொரட்டி வருவாய் ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான வருவாய்த் துறையினரும், கிராமிய மற்றும் கந்திலி போலீஸாரும் கொரட்டி அருகே உள்ள மைக்காமேடு, செல்லரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் இருந்து ஏதேனும் விழுந்து இருந்ததா என சுமாா் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனா்.

மேலும், கடந்த டிசம்பா் மாதம் திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென சப்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தததாக எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறை... மேலும் பார்க்க

‘மினி பேருந்துகளை வழித் தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம்’

புதிய விரிவான திட்டத்தின்கீழ், மினி பேருந்துகளை வழித்தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திடீரென ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வின்போது பிரசவி... மேலும் பார்க்க

பூச்சி கண்காணிப்பு செயலி செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு பூச்சி கண்காணிப்பு செயலி தொடா்பான செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை சாா்ப... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே விஷம் அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அருகே மடப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அப்ரன்ஜி (54). இவா், நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் க... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் 7.5 பவுன் திருட்டு

அரசுப் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் 7.5 பவுன் நகை திருடப்பட்டது. வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு 102 ரெட்டியூா் கிராமத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ஹரிதாஸ் மனைவி சண்முகப்பிரியா (28). இவா் தன்னுடைய... மேலும் பார்க்க