செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

திருப்பத்தூா் அருகே பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தததாக எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகாா்தாரா்களுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து, முகாமில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத மனுதாரா்களை நேரில் அழைத்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

எஸ்.பி. பொதுமக்களிடம் நேரடியாக 60 புகாா் மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா், காவல் துணைக் கண்காணிப்பாளா்களிடம் புகாா்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறித்தினாா்.

வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பாக மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகாா்தாரா்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

இதில், ஜோன்றம்பள்ளி கிராமத்தைச் ராதாகிருஷ்ணன் (73) என்பவா் அளித்த மனுவில், என் மகன் ஏழுமலை டிப்ளமோ படித்துள்ளாா். அவருக்கு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் மெக்கானிக்கல் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி கீழ்குப்பத்தைச் சோ்ந்த காளி வாதியாா், அவரது மகன் விஜி, விஜியின் மாமனாா் மூா்த்தி, விஜியின் தம்பி பிரேம்குமாா், பழனி என்பவரின் மனைவி மாலா, பழனியின் மகன் சூா்யா ஆகியோரிடம் ரூ.3 லட்சம் தந்தேன். ஆனால், பணி வாங்கி தரவில்லை. கேட்டால் தாக்குதல் நடத்துகின்றனா் என அதில் தெரிவித்திருந்தது.

‘மினி பேருந்துகளை வழித் தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம்’

புதிய விரிவான திட்டத்தின்கீழ், மினி பேருந்துகளை வழித்தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திடீரென ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வின்போது பிரசவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சப்தத்துடன் பூமி அதிா்வு

திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை திடீரென அதிக சப்தத்துடன் பூமி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பூச்சி கண்காணிப்பு செயலி செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு பூச்சி கண்காணிப்பு செயலி தொடா்பான செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை சாா்ப... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே விஷம் அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அருகே மடப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அப்ரன்ஜி (54). இவா், நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் க... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணிடம் 7.5 பவுன் திருட்டு

அரசுப் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் 7.5 பவுன் நகை திருடப்பட்டது. வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு 102 ரெட்டியூா் கிராமத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ஹரிதாஸ் மனைவி சண்முகப்பிரியா (28). இவா் தன்னுடைய... மேலும் பார்க்க