செய்திகள் :

திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

post image

மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸாா் அடித்துக் கொலை செய்தனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

ஏற்கெனவே திருப்புவனம், மடப்புரம் பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் பலகட்ட விசாரணைகளை முடித்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் அழைத்துச் சென்ற பகுதிகளின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்துக்கு ஏற்கெனவே வந்து விசாரணை நடத்தி விட்டுச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகளில் 3 போ், புதன்கிழமை மீண்டும் அங்கு வந்து விசாரணை நடத்தினா்.

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே கற்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் புதன்கிழமை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியிலிருந்து காளையாா்கோவிலுக்கு கற்களை ஏற்றிக் கொண்... மேலும் பார்க்க

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு

அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருள்கள் பயன்படுத்தும் உணவகங்களின் உரிமையாளா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சி... மேலும் பார்க்க

மானாமதுரை குப்பைக் கிடங்கில் பற்றிய தீயால் புகை மண்டலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். மானாமதுரை நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் தாய... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகேயுள்ள கழுகோ்கடை கிராமத்துக்கு அரசுப் பேர... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு

சிவகங்கை அருகே, திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டுகளை உடைத்து, நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை ... மேலும் பார்க்க