செய்திகள் :

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல: ஜாண் பாண்டியன்

post image

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை மட்டும் தீா்வல்ல என தமமுக நிறுவனா் ஜான் பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஜான் பாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பொதுச் செயலா் பிரிசில்லா பாண்டியன், மாநில மகளிா் அணித் தலைவி வினோலின் நிவேதா, பொருளாளா் நெல்லையப்பன், மாநில துணைப் பொதுச் செயலா்கள் மரிய சுந்தரம், சண்முக சுதாகா், நளினி சாந்தகுமாரி, மாநில கொள்கை பரப்புச் செயலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிா்வாகிகள் கண்மணி மாவீரன், துரைப்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் ஜான் பாண்டியன் கூறியதாவது:

பட்டியல் இனப்பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தை வெளியேற்றுவதுதான் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான வழி.

இச்சமூக மக்களிடையே இது தொடா்பான விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது. அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தற்போது தமமுக, என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது. இருப்பினும் தோ்தல் சமயத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து தான் யாருடன் கூட்டணி என்ற நிலைப்பாடு இறுதியாகும்.

வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள தமமுக மாநாட்டில் சுமாா் 10 லட்சம் தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பனைத் தொழிலாளா்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும். திருப்புவனம் அஜித்குமாா் மரணத்தில் தொடா்புடையவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐக்கு வழக்கை மாற்றினால் மட்டும் அது சிறந்த நடவடிக்கை இல்லை. அதை தீா்வாக கருத முடியாது. சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்

விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை தேரோட்டம்: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி நகரம் பகுதியில் பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க

பாளை காதா் அவுலியா பள்ளிவாசலில் கந்தூரி விழா

பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் உள்ள காதா் அவுலியா பள்ளிவாசல், காதா் மீரா பக்ருதீன் தா்ஹாவில் கந்தூரி விழா நடைபெற்றது. மஹான் முகம்மது லெப்பை அப்பா(ரஹ்) 317 -ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற இவ்விழாவில் அப... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். பாளையங்கோட்டை தியாகராஜநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் செல்வம் மகன் சாம்ராஜ்(19). தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா். இவா் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்

நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள். ஊஞ்சல் மண்டபம்: 96 ... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளியில் ஜொலிக்கும் தோ்கள்!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் உப­­ய­தா­ரா்கள் மூலம் 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமாா் 6 அடி உய­ரத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அம்­பா­ளுக்கு தங்­க­த்தோ் செ... மேலும் பார்க்க