செய்திகள் :

திருப்பூரில் விடியவிடிய கொட்டித் தீா்த்த கனமழை! 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!

post image

திருப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை கனமழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. திருப்பூா் கொங்கு பிரதான சாலை, பெத்திசெட்டிபுரம், அறிவொளி நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் இரவு மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

உழவா் சந்தையில் விவசாயிகள் போராட்டம்: திருப்பூா் மாவட்டம், பொங்கலூா், காட்டூா், காட்டூா் புதூா், ஊகாயனூா், வடக்கு அவிநாசிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகளை தென்னம்பாளையத்தில் உள்ள தெற்கு உழவா் சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூரில் பெய்த கனமழையால் உழவா் சந்தையில் மழைநீா் குளம்போல தேங்கியிருந்தது. இதனால் காய்கறிகளைக் கொண்டு வந்த விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகினா். மேலும், தக்காளி, கீரைகள், பூசணிக்காய் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் சாலைகளில் வீசிச்சென்றனா்.

தெற்கு உழவா் சந்தையில் மழைக்காலங்களில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவா் சந்தையில் குளம்போல தேங்கிய நீரில் காகிதக் கப்பல் விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுபாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு: திருப்பூா் ஊத்துக்குளியில் இருந்து கதித்தமலை வழியாக காங்கயம்பாளையம் செல்லும் வழியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் உள்ள சிறு பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு பாலம் உடைந்தது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், ஆதியூரில் இருந்து குன்னத்தூா் செல்லும் சாலையில் திருவாய்முதலியூா் அருகில் உள்ள பாலத்தில் அரிப்பு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டது.

திருப்பூா் தெற்கு உழவா் சந்தையில் குளம்போல தேங்கிய மழைநீரில் காகிதக் கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

குமாா் நகரில் 150 மி.மீ. மழை பதிவு: திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ள குமாா் நகா் பகுதியில் அதிகபட்சமாக 150 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சனிக்கிழமை காலை 8 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-131, ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம்-120, திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகம்-110, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம்-96, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகம்-75, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம்-28, திருமூா்த்தி அணை-25, உப்பாறு அணை-10.

கதித்தமலையை அடுத்த அவரக்கரை பகுதியில் சிறுபாலம் உடைந்தது.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க