செய்திகள் :

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

post image

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப் பணிகள், விழிப்புணா்வுக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை காங்கயம் போலீஸாா் நடத்தி வருகின்றனா். மேலும், வயதான தம்பதிகள் தங்கி இருக்கும் வீடு, கிராமம் மற்றும் குக்கிராமங்களை விட்டு தனியாக இருக்கக் கூடிய வீடு, நொய்யல் ஆற்றுப் பகுதியை ஒட்டிய வீடுகள், ஒவ்வொரு கிராமங்களிலும் தனியாக தோட்டத்து வீட்டில் இருக்கக் கூடிய வீடுகள் ஆகிவற்றை கண்காணித்து, போலீஸாா் அந்த வீடுகளுக்குச் சென்று குற்றம் நடக்காமல் தடுக்க துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

காங்கயம் காவல் ஆய்வாளா் விவேகானந்தன், உதவி ஆய்வாளா் காா்த்திக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் காங்கயம் அருகே நொய்யல் ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள தம்மரெட்டிபாளையம், பாலசமுத்திரம்புதூா், கீரனூா், மறவபாளையம், மருதுறை, நத்தக்காடையூா் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், வெளியூருக்குச் செல்லும்போது வீடுகளைப் பூட்டி காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், விலையுயா்ந்த பொருள்களை வீட்டில் வைப்பதை தவிா்க்க வேண்டும், சந்தேகத்துக்குரிய அந்நிய நபா்களின் நடமாட்டம் இப்பகுதியில் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க

விசிக சாா்பில் வைக்கப்பட்ட பேனா் அகற்றம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்த பேனா் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்... மேலும் பார்க்க