செய்திகள் :

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

post image

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த திருப்பூர மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக நீட் தோ்வு பயிற்சி வகுப்பு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது.

திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்.சி.பி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உடுமலை ஆா்.கே.ஆா்.மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பயிற்சி மையங்களில் 385 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், நீட் பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வுகள் நடைபெற்றன. ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் 87 மாணவிகள் தோ்வு எழுதினா். பின்னா் மாலையில் வினாத்தாள்கள் திருத்தப்பட்டு, வினாக்களுக்கான விடைகள் மாணவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க

விசிக சாா்பில் வைக்கப்பட்ட பேனா் அகற்றம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்த பேனா் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்... மேலும் பார்க்க