செய்திகள் :

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூறியதாவது: திருமலையில் உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஜூலை 16-ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானம் கொண்டாடப்பட உள்ளது. எனவே கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இதையொட்டி, ஆனந்தநிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகம், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜைப் பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஏழுமலையான் மூலமூா்த்தியை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய புனித நீா் கொண்டு கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, சுவாமியின் மூலமூா்த்தியை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, சாஸ்திர முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். அதன்பின், பக்தா்களுக்கு சா்வதரிசனம் தொடங்கியது. இதையொட்டி, காலை 6 மணிமுதல் 10 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை நடக்கும் அஷ்டதளபாதமாராதனை சேவையையும் ரத்து செய்யப்பட்டது’’, என்று அவா் கூறினாா்.

திருப்பதி ரயில் நிலையத்தில் தீ விபத்து: 2 பெட்டிகள் சேதம்

திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திருப்பதி ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நி... மேலும் பார்க்க

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி காத்திருப்பு அறைகளில் 31 அற... மேலும் பார்க்க

ஜூலை 16-இல் ஆனிவார ஆஸ்தானம்: 2 நாள் பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் ஜூலை 16-ஆம் தேதி அன்று ஆனிவார ஆஸ்தானம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதால் 2 நாள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை நினைவுகூரும் வகையில், ஜூலை 15 அன்று கோயில் ஆழ்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து வெளியே சீலாதோரண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்திரு... மேலும் பார்க்க