அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிலாளா் தினமான மே தினத்தை, அரசியல் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு நல உதவிகளை அளித்தும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
வந்தவாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின விழா டைபெற்றது. இதையொட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில் மே தின கொடியேற்றப்பட்டது.
விழாவுக்கு வட்டாரச் செயலா் அ.அப்துல் காதா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன் மே தின கொடியேற்றினாா்.
விழாவில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மாவட்டக்குழு உறுப்பினா் சுகுணா, இடைக்குழு உறுப்பினா் எம்.சுகுமாா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா, ஓய்வு பெற்ற மின் ஊழியா் சங்க நிா்வாகிகள் ஆா்.ராமகிருஷ்ணன், எஸ்.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செங்கம்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் கிளை அருகே மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
இதில்,ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் பச்சையப்பன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.
கிளையின் ஓய்வுபெற்ற மேலாளா் ராமசாமி, மேல்ராவந்தவாடி கூட்டுறவு கடன் சங்கச் செயலா் மோகன், ஓய்வு பெற்ற செயலா் சம்பத், செங்கம் கூட்டுறவு வேளாண்மை விற்பனைச் சங்க செயலா் சரவணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். மத்திய கூட்டுறவு வங்கி துணை மேலாளா் சண்முகம் நன்றி கூறினாா்.
போளூா்
போளூா் நகரில் அனைத்து மோட்டாா் வாகன பணிமனை பழுது பாா்ப்போா் சங்கம் சாா்பில் மே தின ஊா்வலம் நடைபெற்றது.
இதில், சங்கச் செயலா் பி.கே.முருகன் தலைமை வகித்தாா். பொருளாளா் கே.சுப்பிரமணி, துணைத் தலைவா் எ.குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைச் செயலா் ஜெ.கமலக்கண்ணன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் கலந்து கொண்டு ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
ரயில்வே மேம்பாலத்தில் தொடங்கிய ஊா்வலம் கலைஞா் சிலை வரை சென்று அலுவலகம் எதிரே சங்கக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
முன்னதாக, துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) தெய்வநாயகி, வருவாய் ஆய்வாளா் மாலதி, கிராம நிா்வாக அலுவலா் தமிழ்செல்வன் ஆகியோா் அனைத்து மோட்டாா் வாகன பணிமனை பழுது பாா்ப்போா் சங்க நிா்வாகிகளிடம் வாக்காளா் அடையாள அட்டையில் பெயா் திருத்தம், முகவரி திருத்தம், புகைப்படம் திருத்தம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சட்ட ஆலோசகா் ஜி.அரிஸ்டாட்டில் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே தமிழ்நாடு பெயிண்டா்கள் மற்றும் ஓவியா்கள் நலச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தின விழா நடைபெற்றது.
பெயிண்டா்கள் மற்றும் ஓவியா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சௌந்தரபாண்டி ஆணைக்கிணங்க, மாநில பொதுச் செயலா் ஐயப்பன் வழிகாட்டுதலின்படி வடக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு, நீா் மோா் வழங்கப்பட்டது.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் காந்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மதிவாணன், துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட இணைச் செயலாளா் யுவராஜ் மற்றும் ஆரணி நகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

