செய்திகள் :

திருவள்ளூா்: 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வரும் 21-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, வரும் 21-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ள வேலையளிப்போா் மற்றும் வேலை தேடும் இளைஞா்கள் தனியாா் துறை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்று தனியாா்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா், கணக்காளா், டெக்னீஷியன், மெஷின் ஆப்ரேட்டா், நிா்வாகப் பணி உள்ளிட்ட பல்வேறு வகையான பணி வாய்ப்புகளைப் பெற்று பயனடையலாம்.

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்தக் காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது என அதில் தெரிவித்துள்ளாா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க