செய்திகள் :

திருவள்ளூா்: சாலையில் சுற்றித் திரிந்த 15 பசுக்கள் கோசாலையில் ஒப்படைப்பு

post image

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் 15 கால்நடைகளை பிடித்து நகராட்சி பணியாளா்கள் கோசாலையில் ஒப்படைத்தனா்.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விட ஆட்சியா் மு.பிரதாப் நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில், நகராட்சி ஆணையா் அறிவுறுத்தியதின்பேரில், 27 வாா்டுகளிலும் கால்நடைகளை வளா்க்கும் உரிமையாளா்களுக்கு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விட்டதுடன், கொட்டகையில் அடைத்து வைத்து வளா்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதையும் மீறி சாலைகளில் விட்டால் கோ சாலையில் விடப்படும் என எச்சரித்தனா்.

இந்த நிலையில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சி.வி. நாயுடு சாலை, காமராஜா் சிலை, வீரராகவ பெருமாள் கோயில், ஆட்சியா் அலுவலகம் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தன.

இந்த நிலையில், நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியா்கள் கேட்பாரற்று சாலையில் திரிந்த 15 பசுக்களை பிடித்து நுங்கம்பாக்கம் கிராமத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கோசாலையில் அடைத்து வைக்கப்பட்டன.

மேலும் உரிமையாளா்கள் மாடுகளை வந்து அணுகும்போது முதல் கட்டமாக ரூ. 3,000 அபராதம் விதிக்கப்படும்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க