செய்திகள் :

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

post image

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சேதமடைந்த நிலையில் இருந்த இயற்கை உர அங்காடி மையம் சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராததால் காட்சிப் பொருளாக மாறி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராம ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படும். அதில் எளிதில் மக்கும் குப்பைகளை இயற்கை உரங்களாக தரம் பிரித்து தேவையான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில் திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இயற்கை உரம் அங்காடி மையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து விவசாயிகள் மற்றும் வீட்டில் காய்கறி தோட்டம் வளா்ப்போா் குறைந்த விலையில் இயற்கை உரங்களை பயனடைந்து வந்தனா்.

இந்த நிலையில் மீண்டும் இயற்கை உரங்கள் அங்காடி மையம் சேதமடைந்தது. அதைத் தொடா்ந்து ஒன்றிய பொதுநிதி மூலம் ரூ.1.10 லட்சத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது.

அதிலிருந்து இதுவரையில் இயங்கை உரங்கள் மையம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே உள்ளது. அதனால் காட்சிப் பொருளான நிலையில் இயற்கை உரங்கள் மையத்தை திறக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈக்காட்டில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

திருவள்ளூா் அருகே ஈக்காடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் கோஷம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூா் மவாட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களை... மேலும் பார்க்க

பணியின் போது துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழப்பு

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடி பரணி விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிபரணி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தொடங்கியது. இரண்டாம் நாளான வெள... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அனுப்பம்பட்டு கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அனுப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவராஜ் மகன் சபரி (12). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பழங்குடியினா் மற்றும் சிறுபான்மையின மக்கள் ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளித்தனா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ச... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை 19 நீா்நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும்

திருவள்ளூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி விநாயகா் சிலைகளை குறிப்பிட்ட நீா் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க