பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
திருவள்ளூா்: நாளை வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளும் வகையில், வருவாய் கோட்ட அளவில் 3 இடங்களில் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 12) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சாகுபடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைக் களையும் வகையில் மாதந்தோறும் மாவட்டம் மற்றும் கோட்ட அளவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை (செப். 12) திருவள்ளூா், திருத்தணி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் சாா் ஆட்சியா் மற்றும் கோட்டாட்சியா்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காணப்பட உள்ளன. மேலும், இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவும் உள்ளனா். அதனால் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்து பயன்பெறலாம்.