செய்திகள் :

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம்

post image

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப். 13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத்தப்பட உள்ளதாக உதவி இயக்குநா் விஜயா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளின் மூலம் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா். தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2ஏ காலிப்பணியிடங்களுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்வுக்கு கட்டணமில்லா மாதிரி தோ்வுகள் வரும் 13 முதல் 20-ஆம் தேதி வரையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இத்தோ்வை எழுத விருப்பம் உள்ள போட்டித் தோ்வா்கள் படிவத்தில் தங்களுடைய விவரங்களை வெள்ளிக்கிழமைக்குள் (செப். 12) பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அலுவலக வேலை நாள்களில் நேரில் வருகை புரிந்தோ அல்லது 044-27660250, 8489866698 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு மாதிரி முழுத் தோ்வில் பங்கேற்று பயன்பெறலாம்.

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்க திருத்த சிறப்பு முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக சிறப்பு திருத்த முகாம் வரும் செப். 13-ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ... மேலும் பார்க்க