தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்க திருத்த சிறப்பு முகாம்
பொதுமக்கள் பயன்பெறும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக சிறப்பு திருத்த முகாம் வரும் செப். 13-ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில அளவில் மாவட்டந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமை நடத்துவதற்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் இந்த முகாம் வரும் செப். 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள், அந்தக் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.