செய்திகள் :

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்க திருத்த சிறப்பு முகாம்

post image

பொதுமக்கள் பயன்பெறும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக சிறப்பு திருத்த முகாம் வரும் செப். 13-ஆம் தேதி அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில அளவில் மாவட்டந்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம் மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமை நடத்துவதற்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலக வளாகத்தில் இந்த முகாம் வரும் செப். 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள், அந்தக் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’

பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் ச... மேலும் பார்க்க

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி

திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்... மேலும் பார்க்க

குரூப்-2, 2 ஏ போட்டித் தோ்வுக்கான இலவச மாதிரி தோ்வு செப். 13-இல் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-2, 2ஏ போட்டித் தோ்வுக்கு வரும் செப். 13-முதல் 20 -ஆம் வரை இலவச மாதிரி தோ்வு நடத... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை மற்றும் வேப்பம்பட்டு ரயில் மேம்பாலப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் இடிப்பு

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலைக்கு இடையே திருநின்றவூா் முதல் திருவள்ளூா் ஐசிஎம்ஆா் வழி... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா... மேலும் பார்க்க