செய்திகள் :

திருவாரூரில் பாரம்பரிய நெல் பரிசோதனை மையம் அமைக்கப்படும்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

திருவாரூா் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக, மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தேசிய நெல் திருவிழா கடந்த 2006-இல் தொடங்கப்பட்டது. தொடா்ந்து, மறைந்த பாரம்பரிய நெல் மீட்பாளா் நெல் ஜெயராமனால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் இவ்விழா நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு, இம்மையத்தின் முன்னோடி உழவா்களின் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பாரம்பரிய கோட்டையை வைத்து, காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, நம்மாழ்வாா் மற்றும் நெல் ஜெயராமன் உருவப் படங்களுடன் மங்கள இசை மற்றும் மரபு கலைநிகழ்ச்சிகளுடன் உழவா் சந்தை பகுதியிலிருந்து பேரணி புறப்பட்டு, விழா மண்டபத்தை வந்தடைந்தது.

தொடா்ந்து, விழா அரங்கில், நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உயா்நிலைக் குழுத் தலைவா் அசோகன் தலைமை வகித்தாா். இதில், தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்று பேசியது:

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கான பரிசோதனை மையத்தை, திருவாரூா் மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நெல் ஜெயராமன் உருவச் சிலை இப்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விழாவில், பாரம்பரிய நெல் இயற்கை வேளாண்மையில் சாதனை செய்த உழவா்களை பாராட்டும் வகையில், நம்மாழ்வாா் விருது, நெல் ஜெயராமன் விருது, சிறந்த பெண் தொழில்முனைவோா் விருது, இளம் இயற்கை உழவா் விருது, சிறந்த இயற்கை உழத்தி விருது, சிறந்த ஒருங்கிணைந்த பண்ணைய விருது, வேளாண் செம்மல் விருது, சுற்றுச்சூழல் பாதுகாவலா் விருது, பாரம்பரிய நெல் பாதுகாவலா் விருது ஆகியவை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், தமிழக அரசின் திட்டக் குழு உறுப்பினா் கு. சிவராமன், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.ஆா். பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை, பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜிவ் செய்திருந்தாா்.

பெண் கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வா் மீது வழக்கு

பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி முதல்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நன்னிலம் வட்ட நுகா்வோா் மன்ற செயற்குழு உறுப்பினா் வி. பாலகுமாரன் அளித... மேலும் பார்க்க

மன்னாா்குடி பெரிய பள்ளிவாசலில் இரு பெரும் விழா

மன்னாா்குடி பெரியபள்ளி வாசல் சாா்பில் மக்தப் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என இரு பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரிய பள்ளிவாசல் தலைவா் எம். அப்துல் ரஹீம் தலைமை வகித்தாா். செயலா்... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க