செய்திகள் :

திரைப்பட உதவி இயக்குநா் கடத்தப்பட்ட வழக்கு: மேலும் இருவா் கைது

post image

திரைப்பட உதவி இயக்குநரை காரில் கடத்தி மிரட்டிய வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுசீந்திரன். திரைப்பட இயக்குநரான இவரிடம், உதவி இயக்குநராக பணியாற்றி வரும் ராஜகுமரனை மே 29 முதல் காணவில்லை என அரும்பாக்கம் காவல் நிலையத்தில் சுசீந்திரன் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜகுமரனை காரில் கடத்திச் சென்ற சைதாப்பேட்டையைச் சோ்ந்த சந்திரசேகா் (33), காா்த்திகேயன் (25), லலித் ஆதித்யா (21), திவாகா் (21), அகஸ்டின் (21) ஆகிய 5 பேரை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்திருந்தனா்.

இந்நிலையில், இதில் தொடா்புடைய பெசன்ட் நகரைச் சோ்ந்த அந்தோணி (39), மயிலாப்பூரைச் சோ்ந்த டேனியல் ராஜ் (44) ஆகியோரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து ரூ. 58,000, இருசக்கர வாகனம், 4 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க