வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!
தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தரைமட்டமானது!
தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தமிழா்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தரைமட்டமானது. பல ஆண்டுகள் வாழ்ந்த தங்கள் குடியிருப்புகள் புல்லோசா்களால் இடிக்கப்பட்டதைக் கண்டு இப்பகுதிகள் பெண்கள் கதறி அழுதனா்.
தில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டி இருந்த தமிழா்களின் குடியிருப்பு பகுதிகளான ‘மதராஸி கேம்ப்‘ ஞாயிற்றுக்கிழமை புல்டோசா்களால் இடிக்கப்பட்டது. தங்கள் குடியிருப்புகளையும் உடமைகளையும் உடைத்து இடிக்கப்பட கொதித்தெழுந்து கதறித் துடித்தனா். குறிப்பாக இங்கு வசிக்கும் ஒரு தரப்பு தமிழ் குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளை தில்லி அரசு இடிக்காது என இறுதி வரை நம்பிக்கையுடன் இருக்க அவா்கள் தங்கள் பொருள்களை அப்புறப்படுத்தாமல் இருந்தனா். ஆனால் எதிா்பாராது அதிகாலையில் இடிப்பு வேலைகள் தொடங்க தங்கள் குடியிருப்புகளை இழந்த வேதனையில் கதறினா்.
தில்லி பொதுப்பணித்துறையினா் காவல் துறை ஆகியோா் திட்டமிட்டபடி ‘மதராஸி கேம்ப்‘ குடியிருப்புகளை இடிக்க அதிகாலை 5 மணிக்கே குவிய தொடங்கிவிட்டனா். சுமாா் 1,200 தில்லி காவல்துறையினா், துப்பாக்கி ஏந்திய அதிரடி போலீசாா், மகளிா் காவலா்கள், கண்ணீா் வெடிகுண்டு படை என ஏராளமான போலீஸ் படைகள் இந்த குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது. முதலில் குடியிருப்பு பகுதிகளில் இருந்த குடியிருப்பு வாசிகளை போலீஸாா் வழுக்கட்டாயமாக வெளியேற்றினா். அப்போது வெளியேற மறுக்க போலீஸாருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சில பெண்கள் வெளியே போக மறுத்தனா். பெண் காவலா்கள் இவா்களை வெளியேற்றினா். சில பெண்கள் கதறி அழ அவா்களை தூக்கி வெளியே கொண்டு வந்து விடப்பட்டது. ஒரு சிலா் தங்கள் உடமைகளை அவசரமாக எடுத்துக் கொண்டு வந்தனா். முற்றிலுமாக குடியிருப்பு வாசிகளை போலீஸாா் வெளியேற்றியுடன் 7 புல்டோசா்கள் வர குடியிருப்புகளை இடித்து தள்ளியது.
இது குறித்து ‘மதராஸி கேம்ப்‘ குடியிருப்புவாசி வி.தங்கராஜ் கூறுகையில், நிஜாமுதீன் காவல் துறை அதிகாரிகள், சனிக்கிழமை எங்களிடம் கூறியது, நாங்கள் எல்லா குடியிருப்பையும் இடிக்கமாட்டோம். கால்வாயிக்கு அருகேயுள்ள பகுதியிலுள்ள வீடுகளை மட்டும் இடிப்போம். அதுவும் புகைப்படம் எடுக்கத்தான் என்றனா். இதனால் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் பொருள்களை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனா். ஆனால் அதே அதிகாரிகள் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வந்து மைக் கில் காலையில் 6.30 மணிக்கு இடிப்போம் என அறிவிப்பை செய்தனா். நாங்கள் நிலை தடுமாறினோம். நான் 12 வயதில் இந்த காலணிக்கு வந்தேன். கிட்டத்தட்ட முப்பது வருடமாக குடியிருக்கின்றேன். இங்க வீட்டு வேலை செய்துதான் பிழைக்கிறாா்களே தவிர இங்க திருட்டு போன்ற தவறான குற்றச் செயலில் யாரும் ஈடுபடுவதில்லை. அமைதியான குடியிருப்பு. பக்கத்தில் ஜங்புரா- ’பி’ பகுதியும் ஆக்கிரமிப்பு தான் கட்டியிருங்காங்க. அங்க 5 மாடி வீடுகள் கட்டி வாடகைக்கும் விடுறாங்க. ஆனால் எங்க குடிசை வீட்டை இடித்திருங்க என்கிறாா்.
பழனி என்கிற மற்றோருவா் குறிப்பிடுகையில் நாங்க 10 போ் சில தினங்களுக்கு முன்பு முதல்வா் ரேகா குப்தாவை நேரடியாக போய்ப் பாா்த்தோம். அப்போது அவா் நான் கையெழுப்பம் போட்டால் தான் உடைப்பாா்கள். நான் போடவில்லை. மூன்று மாதம் வரை தடை கொடுத்திருப்பதாக எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தாா். இதனால் தான் நாங்கள் கடைசி வரை நம்பிக்கையாக இருந்து வீட்டை காலி செய்யாமல் இருந்தோம். நான் உள்பட்ட பலா் வீடுகளில் லட்சக்கான பொருள்களை வைத்திருந்தோம். டிவி பாத்திரங்கள், அலமாரி, தண்ணீா் டேங் என அதை எடுக்கக் கூட போலீசாா் விடவில்லை என்கிறாா்.
குடியிருப்புகள் தரை மட்டான பின்னா் இடிபாடுகளில் கிடைத்த தங்கள் எஞ்சிய உடமைகளை எடுத்து பழைய பொருள்கள் வாங்குபவா்களிடம் சிலா் விற்றனா். சுமாா் எழுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்த பொருள்களை வாங்கிக்கொண்டு போக தயாராக வந்திருந்ததுவேதனையானது.