செய்திகள் :

தில்லியில் அமித் ஷாவைச் சந்தித்தேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

post image

தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"நான் ஹரித்வார் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றேன். ஆனால் தில்லி சென்றதுமே அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்று நோக்கத்திலும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் கருத்துகளை எடுத்துச் சொன்னோம்.

என்னுடைய கருத்துகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகளைச் சொல்ல உரிமை உள்ளது. அவரவருடைய கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கக்கூடிய ஒன்று.

இந்த சந்திப்பின்போது ரயில்வே அமைச்சரும் அங்கு இருந்தார். ஈரோட்டிலிருந்து ஏற்காடு செல்லும் ரயில் முன்கூட்டியே புறப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், அதன் நேரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். அதை பரிசீலிப்பதாக அமைச்சர் சொன்னார்.

மக்கள் பணி செய்வதற்கும் இயக்கம் வலிமை பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று கூறினார்.

Former AIADMK minister Sengottaiyan has said that he met Union Ministers Amit Shah and Nirmala Sitharaman in Delhi.

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

திருட்டு வழக்கில் கைதான ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, திமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்: வேலூா் மாவ... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

ஆளுநா் மாளிகையில் நிகழாண்டு ‘நவராத்திரி கொலு’ செப். 22 முதல் அக். 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதைக்காண முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழக ஆளுநா்... மேலும் பார்க்க

தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை: அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான, தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா். சென்னை கலைவாணா் அரங்கில் நடை... மேலும் பார்க்க

செப். 14-இல் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் செப். 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. காலை 6 மணி முதல் 8 மணி வரை குருவாயூரப்பனுக்கு அகண்ட பாலாபிஷேகம், 7 ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவல... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு நுகா்வோரை சென்றடைய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க