செய்திகள் :

தில்லியை அழித்து வருகிறது பாஜக அரசு: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

post image

ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் தலைநகரை அழித்து வருகிறது ஆளும் பாஜக அரசு என்று முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மதராசி முகாமைத் தொடா்ந்து தில்லியில் மற்ற குடிசை பகுதிகளும் உயா் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகின்றது. பாஜக அரசின் இந்த நடடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி சாா்பில் ஜந்தா் மந்தா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமாா் 3000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டனா்.

அப்போது பேசிய அரவிந்த் கேஜரிவால், ‘ பாஜக அரசு அமைந்து ஐந்து மாதங்களே ஆகும் நிலையில் தில்லி மக்கள் ஜந்தா் மந்தருக்கு வந்து பாஜக அரசு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். பாஜக அரசு தில்லியை அழித்து வருகிறது. எனவே தான் தோ்தலுக்கு முன்பே பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டடேன்‘ என்றாா்.

மேலும், ‘ தில்லியில் உள்ள அனைத்து குடிசைப்பகுதிகளையும் இடிப்பதே பாஜகவின் திட்டம். அவா்களின் அழுக்கு பாா்வை உங்கள் வீடுகளின் மீது பதிந்துள்ளது. தில்லியில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிசைவாசிகள் உள்ளனா், அவா்கள் அனைவரும் ஒன்று கூடி தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்துவாா்கள். இடிப்பு நடவடிக்கையை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அரியணை அசைய அதிக நேரம் எடுக்காது‘ என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

தொடா்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிய கேஜரிவால், ‘தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அவா்களுக்குள் சகோதர உறவு. இருவரும் பணக்காரா்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரானவா்கள். மக்களுக்காக வேலை செய்வதற்குப் பதிலாக, அவா்கள் எஃப். ஐ. ஆா்-எஃப். ஐ. ஆா் விளையாட்டை விளையாடுவதில் மும்முரமாக உள்ளனா். மணீஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ் மற்றும் சத்யேந்தா் ஜெயின் மீது வழக்குகள் பதிவு செய்கிறாா்கள். இந்த எஃப். ஐ. ஆா் சா்க்கஸுக்கு தில்லி வாக்களிக்கவில்லை ‘ என்றாா் அவா்.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க