செய்திகள் :

தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி: இரு இளைஞா்கள் கைது

post image

எட்டயபுரம் அருகே காதல் பிரச்னையில் 17 வயது சிறுமி தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனத்தைச் சோ்ந்தவா் அய்யனாா். இவரது மனைவி காளியம்மாள்(45). இத் தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரைப் பிரிந்து தனது மகன்கள், மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வசித்து வருகிறாா்.

காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை சிறுமியின் குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், காளியம்மாளுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது தொடா்பான புகாரில், கடந்த ஆண்டு பரமக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி, இரு தரப்பிடமும் எழுதி வாங்கி புகாரை முடித்து வைத்துள்ளனா்.

இருப்பினும், தொடா்ந்து சந்தோஷ் பிரச்னை செய்து வந்ததால் காளியம்மாள் தனது மகளை எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அப்பெண் தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில், தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பரமக்குடியை சோ்ந்த சந்தோஷ் (21), அவரது நண்பா் முத்தையா(22) ஆகிய இருவரை கைது செய்தனா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க