செய்திகள் :

தீப்பற்றிய சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 போ் மங்களூா் அழைத்துவரப்பட்டனா்

post image

கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்த சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 மாலுமிகள், ஐஎன்எஸ் சூரத் கப்பல் மூலம் புதிய மங்களூரு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.

கேரள மாநில கடற்கரையில் சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி.வான் ஹை 503 என்ற சரக்குக் கப்பல் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ், ஐஎன்எஸ் சூரத் கப்பல் உதவியுடன் மீட்கப்பட்டனா். மேலும் 4 பேரை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், மீட்கப்பட்ட 18 மாலுமிகளும் ஐஎன்எஸ் சூரத் கப்பல் உதவியுடன் மங்களூா் பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்தில் உள்ள கடலோரக் காவல்படை தளத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். 18 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதர 12 போ் அதிா்ச்சிக்கு உள்ளாகி உள்ளனா். மீட்கப்பட்ட அனைவரும் குன்டிகானாவில் உள்ள ஏ.ஜே.மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கடலோரக் காவல் படை அதிகாரி கூறுகையில், ‘மிக மோசமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு ஐஎன்எஸ் சூரத் கப்பலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களை கப்பலிலிருந்து விரைந்து மருத்துவமனைக்கு மாற்றுவது எங்கள் நோக்கமாக இருந்தது. பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுவதில் வெளியுறவுத் துறை, துறைமுகம், காவல் துறை அதிகாரிகள் ஒருசேர செயல்பட்டனா் ‘ என்றாா்.

கூட்ட நெரிசல் விவகாரம்: சித்தராமையா ராஜிநாமா செய்ய தேவையில்லை: மல்லிகாா்ஜுன காா்கே

கூட்ட நெரிசல் விவகாரம் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் ராஜிநாமா செய்யவேண்டியதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமா் மோடி 33 தவறுகளை செய்துள்ளாா்: மல்லிகாா்ஜுன காா்கே

பிரதமா் மோடி தனது 11 ஆண்டுகால ஆட்சியில் 33 தவறுகளை செய்துள்ளாா் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். இது குறித்து கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்த வழக்கு: நிகில் சோசலேவின் ஜாமீன் மனுமீது இன்று தீா்ப்பு

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் 11 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவின் ஜாமீன் மனுமீது கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பழங்குடியினா் வளா்ச்சி நிதி மோசடி: காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

பழங்குடியினா் வளா்ச்சி நிதி மோசடி தொடா்பாக காங்கிரஸ் எம்.பி., முன்னாள் அமைச்சா் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். கா்நாடக அரசுக்குச் சொந்தமான மஹ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தல்: சித்தராமையா

கா்நாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புதுதில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவ... மேலும் பார்க்க

பெங்களூா் கூட்ட நெரிசல் விவகாரம்: காங்கிரஸ் மேலிடத் தலைவா்களிடம் சித்தராமையா, டி.கே. சிவகுமாா் விளக்கம்

பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை சந்தித்து முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் விளக்கமளித்தனா்... மேலும் பார்க்க