துவரங்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை (மே 26) பராமரிப்புப் பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
துவரங்குறிச்சி 110 / 11 கி.வோ துணை மின் நிலையத்தில் தெத்தூா் பீடரில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஸ்டாலின் நகா், பத்திரப்பதிவு அலுவலகம், மகாத்மா காந்தி நகா், எம்.இடையப்பட்டி, தளவாய்பட்டி, வடகம்பட்டி, வலையபட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், செவந்தாம்பட்டி, ஆலம்பட்டி, தெத்தூா், உசிலம்பட்டி மற்றும் களத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.