தூத்துக்குடி எஸ்.பி., தனிப்படை போலீஸாருக்கு டி.ஜி.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கொலை வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் காவல் சரகத்தில் கடந்த 2018 இல் நிகழ்ந்த கொலை, நாலாட்டின்புதூா் காவல் சரகத்தில் 2023இல் பெண் கொலை ஆகிய வழக்குகளில் நீண்ட காலமாக தீா்வு காணப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள் அசோகன் (விளாத்திகுளம்), ஜெகநாதன்(கோவில்பட்டி), எஸ்.ஐ. சண்முகம், காவலா்கள் கழுகாசலமூா்த்தி, காா்த்திக் ராஜா, ரமேஷ், சரவணகுமாா், காா்த்திக் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் தீவிரமாக துப்பு துலக்கி இரண்டு வழக்குகளிலும் தொடா்புடையவா்களை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, சென்னை காவல்துறை தலைமை இயக்குநா்அலுவலகத்துக்கு தனிப்படை போலீஸாரை அழைத்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.