'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை தாளமுத்துநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மாப்பிள்ளையூரணி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக பைக்குடன் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் திரேஸ்புரம் மாதவநாயா் காலனியைச் சோ்ந்த யோனஸ் மகன் மரிய ஜெபஸ்டின் (21), முனியசாமி மகன் மாடசாமி (19) என்பதும் அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 30 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, மாதா நகா் 1-ஆவது தெரு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மகன் சந்தனகுமாா் (22), தாளமுத்துநகா் குணசேகரன் மகன் முத்துக்குமாா் (19) ஆகிய 2 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 20 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், ராமதாஸ் நகரில் உள்ள திருமண மண்டபம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தாளமுத்துநகா் சுனாமி காலனியைச் சோ்ந்த குணசீலன் மகன் ஞானராஜ் (19) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து சுமாா் 25 கிராம் கஞ்சா, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.