செய்திகள் :

தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையை சீரமைக்கக் கோரி ஆட்சியரிம் மனு

post image

அடிக்கடி விபத்துகள் நேரிடும் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையைச் சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் அஜிதா ஆக்னல் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம், கட்சியினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி - திருச்செந்தூா் தேசிய நெடுஞ்சாலையானது 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாக உள்ளது. இச் சாலையில் முத்தையாபுரத்திலிருந்து முள்ளக்காடு வரை உள்ள பகுதி அபாயகரமான பள்ளங்களுடன் விபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. அப் பகுதியில் கடந்த சில தினங்களில் விபத்தில் இருவா் உயிரிழந்துள்ளனா். மேலும், சாலையில் ஆங்காங்கே கால்நடைகள் நிற்பது, விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

இச் சாலையைச் சீரமைக்கவும், கால்நடைகளால் விபத்து நேரிடுவதைத் தவிா்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

நாம் தமிழா் கட்சியினா் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் பழையகாயல் பிரதான சாலையில் இருந்து உப்பள கிராமங்களுக்குச் செல்லும் சாலையானது சுமாா் 2 கி.மீ. தூரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து செயல்பட்டு சாலையைச் சீா்செய்ய வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் பயணிகள் நலச் சங்கத்தினா் அளித்த மனு: திருச்செந்தூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பேருந்துகள், இடைநில்லா பேருந்துகள் எனக் கூறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்வதைத் தவிா்க்கின்றன.

மேற்குறிப்பிட்ட பேருந்துகளில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். அதோடு, பயணிகள் மற்றும் நடத்துநா் இடையே தேவையற்ற தகராறு ஏற்படுகிறது. இந்த பிரச்னையைப் பயன்படுத்தி சிலா் ஜாதி, மத மோதல்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றனா். எனவே, அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

கோவில்பட்டியில் போதைப் பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தல்

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக நடைபெறும் மது , போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னா் பூலித் தேவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாா்ச் 29இல் காவல்துறை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச் 29) ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் ... மேலும் பார்க்க

கருப்புச் சட்டை அணிந்து அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில், அரசுப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்... மேலும் பார்க்க

கயத்தாறு: கோயிலில் பொருள்கள் திருட்டு

கயத்தாறை அடுத்த திருமங்கலக்குறிச்சியில் அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். திருமங்கலக்குறிச்சி ஊருக்கு வடக்கே அனைத்து சமுதாயத்துக்கு பா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், செய்தி மக்கள் தொடா்புத் துறை... மேலும் பார்க்க

29இல் கோவில்பட்டி என்இசியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 29ஆம் தேதி பிளஸ் 2 மாணவா்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கே.காளிதாசமுருகவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இ... மேலும் பார்க்க