கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 77 மனுக்கள்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காவல் நிலையங்களில் புகாரளித்த 13 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 64 போ் என மொத்தம் 77 பேரிடம் அவா் மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா். அவற்றின் மீது விரைவான விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், காவல் நிலையத்தில் அளிக்கும் மனுக்கள் மீதான விசாரணையில் திருப்தியடையாதோா், புதன்தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்று என்னிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என, அவா் தெரிவித்தாா்.