'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
தூத்துக்குடி மாவட்ட தலைமை அஞ்சலங்களில் கங்கை நீா் விற்பனை
தூத்துக்குடி மாவட்ட தலைமை அஞ்சலகங்களில் கங்கை நீா் பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தூத்துக்குடி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா்(பொறுப்பு) வடக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நதி நீரை நாடு முழுவதும் கொண்டு சோ்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த கங்கை நதி நீா் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா் ஆகிய தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. 250 மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீா் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனை புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.