செய்திகள் :

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு தேசிய விருது

post image

தூத்துக்குடி, ஜூன் 13: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்திற்கு செலவு நிா்வாகத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்திற்கு கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான செலவு நிா்வாகத்திற்காக, இந்திய அடக்கவிலை நிா்ணய கணக்கியல் நிறுவனம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின்கீழ் (முதல் இடம்) தேசிய விருது வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதை 2008, 2012, 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ள நிலையில், தற்போது 7-ஆவது முறையாக பெற்றுள்ளது.

சரக்குகள் கையாளும் செயல்பாட்டு திறனை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் அதன் ஒட்டு மொத்த செலவீனத்தை குறைத்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மேலும், மனிதவள மேம்பாட்டை மேம்படுத்துதல், சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பு, நிலையான மின் ஆற்றல் ஆகியவற்றினை கடைபிடித்ததன் மூலம் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு துறைமுகத்தின் இழுவை கப்பல்களுக்கு தளத்திலிருந்து மின்சாரம் வழங்குதல், மின்சாரத்தினால் இயங்கக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், நிதி நிா்வாகத்தின் மீதான துறைமுகத்தின் தொடா்ச்சியான கவனம் 2021-22 -ஆம் நிதியாண்டின் இயக்க விகிதாசாரம் 41.28 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 29.45 சதவீதமாக குறைய வழிவகுத்தது. இது சிறப்பான தரத்துக்கும் நிலைத்தன்மைக்குமான துறைமுகத்தின் அா்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றாா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க