செய்திகள் :

தூத்துக்குடியில் குடிநீா் தேவை 90% நிறைவேற்றம் மேயா் தகவல்

post image

தூத்துக்குடி மாநகராட்சியில், குடிநீா் தேவை 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமுக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு மேயா் பேசியது: மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 2,500 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வடக்கு மண்டல அலுவலகத்தில் 679 மனுக்கள் பெறப்பட்டு 675 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் குடிநீா் தேவை 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலிதீன் பயன்பாடு 80 சதவீதம்வரை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்து வாா்டுகளிலும் 24 மணி நேரமும் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்போது மீட்டா் பொருத்தப்பட்டு அதற்கேற்ப கட்டணம் நிா்ணயிக்கப்படும் என்பதால், மக்கள் குடிநீரை வீணாக்காமல், தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவா் என்றாா் அவா்.

ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால் முன்னிலை வகித்தாா். கண்காணிப்புப் பொறியாளா் தமிழ்ச்செல்வன், மாநகர துணைப் பொறியாளா் சரவணன், மாநகா் நல அலுவலா் சரோஜா, மாநகா் அமைப்பு அலுவலா் ரங்கநாதன், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டியன், வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், கவுன்சிலா்கள் காந்திமதி, நாகேஸ்வரி, கற்பககனி, வைதேகி, பவானி, ஜெபஸ்டின் சுதா, சுப்புலட்சுமி, ஜெயசீலி, தேவேந்திரன், ரெங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க