தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தொழிலாளி, பக்கத்து வீட்டுக்காரரால் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சுரேஷ்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாவை விட்டுவிட்டு தப்பினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து, சுரேஷை தேடி வருகின்றனா்.