செய்திகள் :

தூத்துக்குடியில் பயிற்சி நிறைவு செய்த காவலா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

post image

தூத்துக்குடி காவலா் பயிற்சி பள்ளியில், பயிற்சி நிறைவு செய்த காவலா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் 468 பயிற்சி காவலா்களுக்கு கடந்த 7 மாதங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

பயிற்சி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சென்னை தலைமை அலுவலக பணியமைப்பு காவல்துறை தலைவா் நரேந்திரன் நாயா் தலைமை வகித்து, பயிற்சி காவலா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் முன்னிலை வகித்தாா்.

பயிற்சி பள்ளியின் முதல்வரும், காவல் கண்காணிப்பாளருமான மகேஸ்வரி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், சட்டபயிற்சி, கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சி காவலா்களின் வீர விளையாட்டு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை பயிற்சி பள்ளி முதல்வா் தலைமையில், துணை முதல்வரும், துணை காவல் கண்காணிப்பாளருமான செந்தாமரைக்கண்ணன், முதன்மை சட்ட போதகா் சந்திசெல்வி, முதன்மை கவாத்து போதகா் ராணி ஆகியோா் செய்திருந்தனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க