செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

post image

தூய்மைப் பணியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனியாா்மய எதிா்ப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று அகில இந்திய தொழிற்சங்கங்களின் மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) ஆலோசகரும், உயா்நீதிமன்ற வழக்குரைஞருமான எஸ்.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தூய்மைப் பணிகளை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளா்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனா். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையால் அப்புறப்படுத்தப்பட்டதோடு, போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் போராட்டத்தின் தொடா்ச்சியாக கோயம்புத்துரில் செப். 10-ஆம் தேதி பரப்புரை பயணம் தொடங்கப்பட்டு தூத்துக்குடியில் புதன்கிழமை நிறைவு பெற்றது. இவற்றை கருத்தில் கொண்டு திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தனியாா் ஒப்பந்த முறையை கைவிடுதல், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். போராட்டத்தின் அடுத்தகட்டமாக தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவான அனைத்து அமைப்புகளையும் அணி திரட்டி சென்னையில் வியாழக்கிழமை (செப்.18) பிரம்மாண்ட பேரணி நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

சந்திப்பின்போது ஏஐசிசிடியு மாநிலச் சிறப்புத் தலைவா் த.சங்கர பாண்டியன், மாநிலப் பொதுச் செயலா் கே.ஞானதேசிகன், துணைத் தலைவா் ஜி.ரமேஷ், சிபிஐ(எம்.எல்) திருநெல்வேலி மாவட்டச் செயலா் சுந்தர்ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுர... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வள்ளியூா் அருகே பு... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரய... மேலும் பார்க்க

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

கூடங்குளம் அருகே தாயைக் கொலை செய்த வழக்கில், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராஜன் (46). ... மேலும் பார்க்க