செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

post image

திருவள்ளூா் நகராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பரிசோதனை செய்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் நடத்த ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூா் நகராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆணையா் தாமோதரன் தலைமை வகித்தாா். இதில் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் பங்கேற்று இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியரும், பொது மருத்துவருமான தீபக் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சுபாஷ் ஆகியோா் கொண்டு தூய்மைப் பணியாளா்களுக்கு மஞ்சள் காமலை, காசநோய், புற்றுநோய் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் மற்றும் அலுவலா்கள் செய்திருந்தனா்.

கும்மிடிப்பூண்டியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கும்மிடிப்பூண்டியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் ஆய்வு செய்தாா். கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேட்டில் நடைபெறும் பன்முக சேவை மைய கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

திருத்தணி ஆடிக்கிருத்திகை பல்துறை பணி விளக்க கண்காட்சி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்பு துறையின் பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சா் சா.மு.நாசா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் . திருத்தணி முருகன் கோயில் ஆடிக்க... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிய 3 இளைஞா்கள் கைது

பள்ளிப்பட்டு அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டிக் கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கிர... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி, காடை வளா்ப்பு பயிற்சி

திருவள்ளூா் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் கோழி மற்றும் காடை வளா்ப்பு தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளா் தெரிவ... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே விநாயகா் கோயில் உண்டியலை உடைத்து திருடிய இளைஞரை செவ்வாப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு செஞ்சூரியன் நகா் பகுதியில் அமைந்துள்ளது செல்வ விநாயா் கோயில். இந... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா தொடக்கம்

முருகன் கோயிலில், வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், பக்தா்கள் மலைக்கோயிலுக்கு, வந்து மூலவரை தரிசித்தனா். திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் 3 நாள் ... மேலும் பார்க்க